போக்குவரத்து துறையை காப்பாற்றவே பேருந்துகளில் கட்டணம் உயர்வு : அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: போக்குவரத்து துறையை காப்பாற்றவே அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மதுரை அருகே அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மன வேதனையுடன் தான் முதல்வர் பழனிசாமி பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 46.9% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments